உள்ளூர் செய்திகள்
80 பேர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து சுவருக்கு வெள்ளை அடித்து உழவாரப்பணி மேற்கொண்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் கண்டியன்கோவில் ஊராட்சி சின்னாரியபட்டியில் மாதேசிலிங்கம் கோவில் உள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால் வளாகத்தில் செடி, கொடிகள் வளர்ந்து இருந்தன.
இதையறிந்த ஈரோடு - திருத்தொண்டீசர் உழவாரப்பணி குழுவை சேர்ந்த 80 பேர் கோவில் வளாகத்தை சுத்தம் செய்து சுவருக்கு வெள்ளை அடித்து உழவாரப்பணி மேற்கொண்டனர்.