உள்ளூர் செய்திகள்
திருப்பூரில் நாளை தொழில்துறை கருத்தரங்கம்
ஸ்கில் இந்தியா பவுண்டேசன் முதன்மை செயல் அதிகாரி முரளி காசிநாத் பங்கேற்று பேசுகிறார்.
திருப்பூர்:
தேசிய பணியாளர் மேலாண்மை நிறுவனம் (என்.ஐ.பி.எம்.,) மற்றும் திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க மனிதவள மேம்பாட்டு அமைப்பு சார்பில் நாளை 7-ந்தேதி கருத்தரங்கம் நடக்கிறது. அப்பாச்சிநகரில் உள்ள ஏற்றுமதியாளர் சங்க அரங்கில் நடைபெறும் கருத்தரங்கில் தொழில் பயிற்சி சட்டத்தை நடைமுறைப்படுத்துதல், தொழில் துறைக்கான நன்மைகள் மற்றும் சட்ட தேவைகள் குறித்து விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஸ்கில் இந்தியா பவுண்டேசன் முதன்மை செயல் அதிகாரி முரளி காசிநாத் பங்கேற்று பேசுகிறார். தொழில் துறையினரின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கிறார்.கருத்தரங்கில் பங்கேற்க, https://bit.ly/3prkiV4 என்கிற முகவரியில் சென்று இணையதளத்தில் வருகைப்பதிவு செய்யவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.