உள்ளூர் செய்திகள்
‘வாட்ஸ்-அப்’பில் ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய ஆசிரியர் கைது
பரமக்குடி அருகே வாட்ஸ்-அப்பில் ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
பரமக்குடி:
ராமநாதபுரம் நாகாச்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது52). இவர் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் வாட்ஸ்-அப் மூலமாக ஆசிரியை ஒருவருக்கு ஆபாச தகவல்களை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த ஆசிரியை சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் சத்திரக்குடி சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தி, ஆசிரியர் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரது செல்போனை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. உடனே சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராமநாதபுரம் நாகாச்சி பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (வயது52). இவர் பரமக்குடி அருகே உள்ள சத்திரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் வரலாற்று பாட ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர் வாட்ஸ்-அப் மூலமாக ஆசிரியை ஒருவருக்கு ஆபாச தகவல்களை அனுப்பி வந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த ஆசிரியை சத்திரக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரின் அடிப்படையில் சத்திரக்குடி சப்- இன்ஸ்பெக்டர் நாகராஜன் விசாரணை நடத்தி, ஆசிரியர் சந்திரன் மீது வழக்குப்பதிவு செய்து அவரது செல்போனை ஆய்வு செய்தார்.
அப்போது அவர் ஆசிரியைக்கு ஆபாச தகவல்கள் அனுப்பி பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தது தெரியவந்தது. உடனே சந்திரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.