உள்ளூர் செய்திகள்
மழை பாதிப்பு... தூத்துக்குடியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்து, வெள்ள சேத விபரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 25-ந் தேதி வரலாறு காணாத அளவில் அதிகனமழை பெய்தது. தூத்துக்குடி மாநகர பகுதியில் பெரும்பாலான இடங்களிலும், புறநகரில் சில பகுதிகளிலும் இன்னும் மழைநீர் தண்ணீர் தேங்கி உள்ளது.
இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள தூத்துக்குடியில் வெள்ள சேதங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு செய்தார்.
இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி சென்ற அவர், பிரையண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். மழைநீரில் நடந்து சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்ற மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மற்றும் மாநகர ஆணையர் சாவித்திரி ஆகியோரிடம் கேட்டறிந்தார்.