செய்திகள்
குழந்தை

கட்டாய திருமணத்தால் குழந்தை பெற்றெடுத்த 16 வயது சிறுமி- வாலிபருக்கு வலைவீச்சு

Published On 2021-11-29 10:28 GMT   |   Update On 2021-11-29 10:28 GMT
மதுரையில் 16 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்த வாலிபரை திருப்பரங்குன்றம் போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை:

மதுரை அவனியாபுரம் பூசாரி உடையார் தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார் (வயது 27). இவருக்கு 16 வயது சிறுமியுடன் திருமணம் பேசி முடிக்கப்பட்டது. இதில் சிறுமிக்கு விருப்பம் இல்லை. இருந்தபோதிலும் பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக சிறுமி கட்டாய திருமணத்துக்கு சம்மதித்தார்.

இதனால் சுரேஷ் குமாருக்கு கடந்த ஆண்டு அந்த சிறுமியுடன் திருமணம் நடந்தது. இந்த நிலையில் சிறுமி நிறைமாத கர்ப்பிணி ஆனார். அப்போது அவருக்கு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அந்த சிறுமிக்கு 17 வயது நடக்கிறது என்ற விவரம் தெரியவந்தது. இதற்கிடையே குழந்தை பெற்றெடுத்த பிறகும் சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட சிறுமி இது குறித்து திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஹேமமாலா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

அப்போது சுரேஷ்குமார் 16 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, குழந்தை பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக திருப்பரங்குன்றம் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவான சுரேஷ்குமாரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News