செய்திகள்
ராணிப்பேட்டையில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள பாலாறு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த வாலிபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் உயிரிழந்தார்.
ராணிப்பேட்டை:
சென்னை தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் வினோத் (வயது 26). இவர் நேற்று முன்தினம் மாலை மோட்டார் சைக்கிளில், சென்னையிலிருந்து, ஆரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். ராணிப்பேட்டை பைபாஸ் சாலையில் உள்ள பாலாறு மேம்பாலத்தில் சென்றபோது அடையாளம் செய்த வாகனம் மோதி உள்ளது.
இதில் படுகாயமடைந்த வினோத் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.