செய்திகள்
கடனை கட்ட முடியாததால் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் தீக்குளித்து மரணம்
சேரன்மகாதேவியில் கடனை கட்ட முடியாததால் சுய உதவிக்குழுவை சேர்ந்த பெண் தீக்குளித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெல்லை:
சேரன்மகாதேவியில் உள்ள யூனியன் அலுவலக தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் தொழிலாளி. இவரது மனைவி தேவி (வயது35). இவர் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் தேவியால் அந்தக் கடனை கட்ட முடியவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்தார்.
இந்த நிலையில் தேவி நேற்று தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ குளித்தார். அலறல் சத்தம் கேட்டு தங்கராஜ் விரைந்து சென்று தீயை அணைத்து காப்பாற்றினார். இதில் அவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தேவி பரிதாபமாக இறந்தார். தங்கராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சேரன்மகாதேவியில் உள்ள யூனியன் அலுவலக தெருவை சேர்ந்தவர் தங்கராஜ் தொழிலாளி. இவரது மனைவி தேவி (வயது35). இவர் அந்த பகுதியில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக இருந்தார். இதில் மகளிர் சுய உதவிக்குழு மூலம் ரூ.1½ லட்சம் கடன் வாங்கி உள்ளார். ஆனால் தேவியால் அந்தக் கடனை கட்ட முடியவில்லை. இதனால் மன உளைச்சல் அடைந்தார்.
இந்த நிலையில் தேவி நேற்று தனது உடலில் மண்எண்ணை ஊற்றி தீ குளித்தார். அலறல் சத்தம் கேட்டு தங்கராஜ் விரைந்து சென்று தீயை அணைத்து காப்பாற்றினார். இதில் அவரது உடலிலும் தீக்காயம் ஏற்பட்டது. இரண்டு பேரையும் அருகில் உள்ளவர்கள் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தேவி பரிதாபமாக இறந்தார். தங்கராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து சேரன்மகாதேவி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.