செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்.

காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரசாரம்: எம்.பி - எம்.எல்.ஏ உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது

Published On 2021-11-23 04:39 GMT   |   Update On 2021-11-23 04:39 GMT
கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
நாகர்கோவில்:

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கலை அடுத்த மாங்கன்றுவிளையில் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் விழிப்புணர்வு பிரசார பயணத்தை கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் தலைமையில் தொடங்கப்பட்டது.

பிரசார பயணம் தொடங்கி 100 மீட்டர் தொலைவில் சென்றவுடன் சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனையடுத்து சாலையில் அமர்ந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

அந்த போராட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டார். போராட்டத்தினால் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் சாலையில் அமர்ந்திருந்து கோஷங்களை எழுப்பினர்.

இதனை அடுத்து கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
Tags:    

Similar News