செய்திகள்
மழை பாதிப்பு- அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டுவருகின்றனர்.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு நாளை தமிழகம் வருகிறது.
இந்த நிலையில், சென்னை தலைமை செயலகத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட பாதிப்பு, நிவாரண நிதி ஆகியவை பற்றி ஆலோசிக்கப்பட்டுள்ளது.