செய்திகள்
இந்தி மொழியை ஏன் கற்க கூடாது?: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து
தமிழகத்தில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழில் அறிவிக்கக் கோரிய வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அமல்படுத்தப்படும் மத்திய அரசின் திட்டங்களை தமிழில் அறிவிக்கக்கோரி உயர்நீதிமன்றம் மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்தி மொழியை ஏன் கற்க கூடாது?. ஒரு மொழியை கற்பது பிறருடன் தொடர்பு கொள்ளதான். மொழி என்பது தகவல் பரிமாற்றத்திற்கானது. மொழியை மொழியாக கையாள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்தது.
அத்துடன் வழக்கு விசாரணை வரும் 22-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.