செய்திகள்
மின்சார நிறுத்தம்

அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம்

Published On 2021-11-17 18:07 GMT   |   Update On 2021-11-17 18:07 GMT
பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
கரூர்:

பள்ளப்பட்டி, கருங்கல்பட்டி, செல்லிவலசு, அரவக்குறிச்சி ஆகிய துணை மின்நிலையங்களில் நாளை (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் பள்ளப்பட்டி, அரவக்குறிச்சி, அண்ணா நகர், தமிழ் நகர், மண்மாரி, வேலம்பாடி, மோளையாண்டிப்பட்டி, பெரியசீத்தப்பட்டி, ரெங்கராஜ் நகர், சவுந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி, ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, அம்மாபட்டி, முத்துக்கவுண்டனூர், வல்லப்பம்பட்டி, சந்தைப்பேட்டை, பண்ணப்பட்டி, இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூர், குரும்பப்பட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துப்பட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு, அரவக்குறிச்சி (டவுன் பகுதி), கொத்தபாளையம், கரடிபட்டி, பெரியவலையபட்டி, ஆர்.பி.புதூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார வினியோகம் இருக்காது என கரூர் கிராமியம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News