செய்திகள்
விபத்து பலி

ஆர்.கே.பேட்டை அருகே வாகனம் மோதி வாலிபர் பலி

Published On 2021-11-17 17:41 GMT   |   Update On 2021-11-17 17:41 GMT
ஆர்.கே.பேட்டை அருகே வாகனம் மோதி வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை அருகே ராஜா நகரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 22). இவர் இரு தினங்களுக்கு முன்பு மோட்டார் சைக்கிளில் ஆர்.கே.பேட்டையிலிருந்து சோளிங்கர் சென்று கொண்டிருந்தபோது, அங்குள்ள தனியார் கல்லூரி அருகே அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனியை உறவினர்கள் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பழனி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகன ஓட்டியை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News