செய்திகள்
மரணம்

அம்மாபேட்டையில் ரெயிலில் அடிப்பட்டு பெண் பலி

Published On 2021-11-16 11:01 GMT   |   Update On 2021-11-16 11:01 GMT
தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற பெண் ரெயிலில் அடிப்பட்டு உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே புளியக்குடி வடக்குதோப்பு தெருவை சேர்ந்தவர் சித்திரவேல். இவரது மனைவி 1தமிழ்ச்செல்வி (வயது 60). இவர் காதுகேளாத மாற்றுத்திறனாளி.

இந்நிலையில் இன்று அம்மாப்பேட்டை ரெயில்வே தண்டவாளத்தை தமிழ்செல்வி கடக்க முயன்றார். அப்போது காரைக்கால் செல்லும் ரெயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே தமிழ்செல்வி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த தஞ்சை ரெயில்வே இருப்பு பாதை போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், தனிப்பிரிவு தலைமை காவலர் சுரேஷ், ஏட்டு சரவணசெல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தமிழ்செல்வியின் உடலை மீட்டு பிரே பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் தண்டவாளத்தில் தமிழ்ச்செல்வி நடந்து சென்ற போது, ரெயில் ஓட்டுநர் ஒலி எழுப்பியும், அவரது காதில் விழாததால் மோதி இறந்தது தெரியவந்தது. இருப்பினும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News