செய்திகள்
ஓடையில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழப்பு
விழுப்புரம் அருகே ஓடையில் மூழ்கி பள்ளி மாணவி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே உள்ள பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகள் சுஜிதா (வயது 14). அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலை மாதிரிமங்கலத்தில் உள்ள பம்பை ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாணவி சுஜிதா இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம் அருகே உள்ள பொய்யப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன் மகள் சுஜிதா (வயது 14). அதே கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்த இவர் நேற்று முன்தினம் மாலை மாதிரிமங்கலத்தில் உள்ள பம்பை ஓடையில் செல்லும் தண்ணீரில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி மாணவி சுஜிதா இறந்தார். அவரது உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.