search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி உயிரிழப்பு"

    • மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்
    • விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்தனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தனியார் பள்ளி வாகனத்தில் இருந்து கீழே இறங்கியபோது, சக்கரத்தில் சிக்கி 5 வயது சிறுமி படுகாயம் அடைந்தார்.

    அங்கிருந்தவர்கள் உடனடியாக மாணவியை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

    விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், வாகன ஓட்டுநர் ஜெகதீஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சிருஷ்டி தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.
    • தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் சிக்கமகளூரு மாவட்டம் கேசவலு ஜோகன்னகெரே கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜூனா. இவரது மனைவி சுமா.

    இந்த தம்பதியின் மகள் சிருஷ்டி (வயது 13). இவர் தரடஹள்ளி கிராமத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் மாணவி சிருஷ்டி பள்ளிக்கூடத்திற்கு வீட்டில் இருந்து நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அந்த சமயத்தில் தரடஹள்ளி சர்க்கிள் பகுதியில் சென்றபோது மாணவி திடீரென்று சுருண்டு விழுந்தார். உடனே அப்பகுதி மக்கள் சிருஷ்டியை மீட்டு எம்.ஜி.எம். ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது மாணவி ஏற்கனவே இறந்துபோனதும், மாரடைப்பால் அவர் சுருண்டு விழுந்து இறந்ததும் தெரியவந்தது. 

    • காதல் விவகாரம் தெரிந்ததும் ஹேமிதாவை பெற்றோர் கண்டித்து உள்ளனர்.
    • ஹேமிதாவுக்கு அஜய் புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்து உள்ளனர்.

    தாம்பரம்:

    பல்லாவரம், வேம்புலி அம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் பாலமுருகன். இவரது மனைவி விமலா. இவர்களது மூத்த மகள் ஹேமிதா (வயது19).இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக். 2-ம்ஆண்டு படித்து வந்தார்.

    கடந்த 27-ந்தேதி அதிகாலை வீட்டில் இருந்து வெளியே சென்ற ஹேமிதா பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பெற்றோர் தேடிவந்தனர். இது தொடர்பாக பல்லாவரம் போலீசிலும் புகார் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் ஹேமிதா உடல் மீட்கப்பட்டது. அவர் ரெயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்ததாக கூறப்பட்டது.

    இதற்கிடையே மகள் ஹேமிதா சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் தெரிவித்து உள்ளனர். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தியபோது பல்வேறு பரபரப்பு தகவல்கள் கிடைத்தன.

    ஹேமிதா அதே பகுதியில் உள்ள டியூஷன் சென்டரில் சிறு வயது முதலே படித்து வந்துள்ளார். அப்போது டியூஷன் மாஸ்டர் அஜய் (26) என்பவருடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது.

    இந்த காதல் விவகாரம் தெரிந்ததும் ஹேமிதாவை பெற்றோர் கண்டித்து உள்ளனர். அதன் பிறகு சில மாதங்களாக இருவரும் பேசுவதை நிறுத்திவிட்டதாக கூறப்படுகின்றது. பின்னர் ஹேமிதா கல்லூரிக்கு சென்றபோது ஹேமிதாவை மீண்டும் அஜய் சந்தித்து காதலை வளர்த்து உள்ளார். ஆனால் ஹேமிதா பயன்படுத்தி இருந்த செல்போனை அவரின் பெற்றோர் வாங்கிக்கொண்டதால் இருவரும் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டது

    இதையடுத்து ஹேமிதாவுக்கு அஜய் புதியதாக செல்போனை வாங்கி கொடுத்து இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி இருவரும் காதலை வளர்த்து வந்து உள்ளனர். இந்த நிலையில் ஹேமிதா மர்மமான முறையில் இறந்து உள்ளார்.

    இதைத்தொடர்ந்து டியூசன் மாஸ்டர் அஜய்யிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஹேமிதா தற்கொலை செய்துகொண்டதாக கூறினால் வீட்டை விட்டு வெளியே வந்து அவர் இரண்டு கிலோமீட்டர் தூரம் உள்ள குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ஏன் வரவேண்டும்.

    அதிகாலை 4 மணிக்கே அவரை வெளியே அழைத்தது யார்? யாரை சந்திக்க சென்றார்? அவரை யாரேனும் தற்கொலை செய்து கொள்வதற்காக தூண்டினார்களா? அல்லது காதலித்து வரும் அஜய்யை பார்ப்பதற்காக அதிகாலை வந்தாரா? என பல கோணங்களில் பல்லாவரம் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

    இதன் பின்னரே ஹேமிதா ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது ரெயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரியவரும்.

    இது தொடர்பாக ஹேமிதா பயன்படுத்திய செல்போன் மற்றும் காதலன் அஜய் பயன்படுத்திய செல்போன் ஆகியவற்றை போலீசார் கைப்பற்றி அதில் உள்ள உரையாடல் மற்றும் செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    • விடுதி அறையில் இருந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது.
    • டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்தவர் 21 வயது கல்லூரி மாணவி. இவர் கோவை கோவில்பாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட். படித்து வந்தார். இதற்காக மாணவி சரவணம்பட்டியில் உள்ள பெண்கள் விடுதியில் அறை எடுத்து தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    நேற்று விடுதி அறையில் இருந்த மாணவிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டது. இதனையடுத்து அவருடன் தங்கி இருந்த தோழி ஒருவர் மீட்டு ஆட்டோ மூலம் அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது உடல் நிலை மிகவும் மோசமாக உள்ளதாகவும், எனவே மேல் சிகிச்சைக்காக வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறும் கூறினர். இதனையடுத்து மாணவியை அவரது தோழி மற்றொரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். மேலும் டாக்டர்கள் மாணவியை பரிசோதனை செய்தபோது அவர் 5 மாத கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது.

    பின்னர் இதுகுறித்து சரவணம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சரவணம்பட்டி போலீசார் தனியார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவியை கர்ப்பமாக்கியது யார் என்றும், அவர் காதல் பிரச்சினையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கர்ப்பம் அடைந்ததன் காரணமாக இறந்தாரா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • ஊட்டியை சேர்ந்த சலீம் என்பவரது மகளான ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    தமிழக சுகாதாரத்துறை மூலம் குழந்தைகளுக்கு இரும்பு மற்றும் போலிக் சத்து ஊட்டச்சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்தநிலையில் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள நகராட்சி பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு கடந்த 6-ந்தேதி சத்து மாத்திரை கிடைத்துள்ளது. அப்போது யார் அதிகமாக ஊட்டச்சத்து மாத்திரை உட்கொள்வது என மாணவ-மாணவிகள் இடையே போட்டி ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து 8-ம் வகுப்பு படிக்கும் 4 மாணவிகள், 6 மற்றும் 7-ம் வகுப்பு படிக்கும் 2 மாணவர்கள் அந்த மாத்திரையை சாக்லெட் சாப்பிடுவது போன்று போட்டி போட்டு 30 முதல் 60 வரை மாத்திரைகள் சாப்பிட்டதாக தெரிகிறது. இதனால் மயங்கி விழுந்த 6 பேரும் ஊட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    இதில் மாணவிகள் உடல்நிலை மோசமானதால் 4 பேரும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    அங்கு, ஊட்டியை சேர்ந்த சலீம் என்பவரது மகளான ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று அந்த மாணவி ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு அழைத்து வந்து கொண்டிருந்தனர். ஆனால் சேலம் தாண்டி வரும்போது அந்த மாணவிக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் மற்றொரு மாணவியின் உடல் நிலையும் கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே சம்பவம் தொடர்பாக நகராட்சி பள்ளி தலைமை ஆசிரியர் முகமது அமீன், மாத்திரை வினியோகிக்கும் கண்காணிப்பு அதிகாரியாகவும், ஆசிரியையாகவும் பணியாற்றி வந்த கலைவாணி ஆகிய 2 பேரை பணியிடை நீக்கம் செய்து, மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அலுவலர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். இதில் சம்பவம் நடந்த கடந்த 6-ந்தேதி கலைவாணி பள்ளிக்கூடத்திற்கு வரவில்லை என்றும், பள்ளிக்கூட பீரோவில் இருந்த மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாகவும் கூறப்படுகிறது.

    மாத்திரைகள் சாப்பிட்டு உயிரிழந்த மாணவி ஜெய்பா பாத்திமாவின் தாயார் அஷ்மா, மாணவி படித்த அதே பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    சம்பவம் தொடர்பாக ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • மாணவி ரோஷிணி படிக்கட்டில் உருண்டு விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • ரோஷிணி காயம் பட்டவுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

    சென்னை:

    சென்னை வேப்பேரி பகுதியில் வசிப்பவர் சர்மா. இவரது மனைவி சீமா சர்மா. சர்மா தங்கசாலை பகுதியில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர்களது மகள் ரோஷிணி சர்மா (வயது 19) வேப்பேரி நெடுஞ்சாலையில் உள்ள ஜெயின் பெண்கள் கல்லூரியில் பி.காம். 3-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று கல்லூரி திறந்த முதல் நாளில் மாணவி ரோஷிணி காலை 8 மணிக்கே கல்லூரிக்கு வந்து விட்டார்.

    ஆனால் கல்லூரி வகுப்பறைக்கு போகவில்லை. படிக்கட்டு அருகில் மயங்கிய நிலையில் தலையில் பலத்த அடிபட்டு அவர் கிடந்தார். அதைப்பார்த்த கல்லூரி பேராசிரியை ஒருவர் கூச்சல் போட்டு மற்றவர்களை அழைத்தார்.

    மாணவி ரோஷிணி ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டு, அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்து போய் விட்டார். அவரது வாயில் முன்பக்க பற்கள் உடைந்து காணப்பட்டது. தலையில் அடிபட்டு ரத்தம் கொட்டிய நிலையில் இருந்தது.

    மாணவி ரோஷிணி படிக்கட்டில் உருண்டு விழுந்து தலையில் அடிபட்டு இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதுபற்றி தகவல் கிடைத்ததும் வேப்பேரி உதவி கமிஷனர் அரிக்குமார், இன்ஸ்பெக்டர் வேலு, சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் ஆகியோர் கல்லூரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மர்ம சாவு சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    ரோஷிணி காயம் பட்டவுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தால் உயிரை காப்பாற்றி இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. அவர் அடிபட்டு கிடந்ததை தாமதமாகவே பேராசிரியர் பார்த்ததாக தெரிகிறது.

    கல்லூரி திறந்த முதல் நாளிலேயே நடந்த இந்த சோகம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மாணவியின் பெற்றோர் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    • இதுவரை மாணவி சரளாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
    • மாணவி சரளா படித்த பள்ளியில் இன்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த கீழச்சேரியில் சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தெக்களூரை சேர்ந்த சரளா (வயது 17) என்பவர் பள்ளியின் விடுதியில் தங்கி 12 -ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று காலை விடுதியில் உள்ள முதல் மாடி அறையில் மாணவி சரளா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தகவல் அறிந்ததும் காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸ், போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    மாணவி தற்கொலை பற்றி அறிந்ததும் பள்ளி விடுதி முன்பு அவரது உறவினர்கள் மற்றும் விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவிகளின் பெற்றோர் திரண்டு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர். இதேபோல் மாணவியின் சொந்த ஊரான தெக்களூரிலும் கிராம மக்களின் மறியல் போராட்டம் நடைபெற்றது.

    மப்பேடு போலீசார் சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். சென்னை ஐகோர்ட்டின் உத்தரவுப்படி இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி போலீசுக்கு உடனடியாக மாற்றப்பட்டது. போலீசார் 3 பிரிவாக பிரிந்து மாணவியுடன் தங்கி இருந்தவர்கள் மற்றும் விடுதி நிர்வாகிகளிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுவரை மாணவி சரளாவின் தற்கொலை முடிவுக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இந்தநிலையில் மாணவியின் உடல் வைக்கப்பட்டு இருந்த திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது.

    ஆஸ்பத்திரி டீன் அரசிவர்ஷன் தலைமையில் டாக்டர்கள் குழுவினர் நாராயண பாபு, பிரபு, வைரமாலா ஆகியோர் மாணவியின் அண்ணன் சரவணன் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்தினர். இது முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டது. மாணவி உடல் பரிசோதனை நடந்ததையொட்டி திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

    வடக்கு மண்டல ஐ.ஜி.தேன்மொழி, ஆயுதப்படை ஐ.ஜி.கண்ணன் மேற்பார்வையில் காஞ்சிபுரம் சரக டி.ஏ.ஜி சத்திய பிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண், தலைமையில் கண்ணீர் புகைகுண்டு வீசும் வாகனத்துடன் 500-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர்.

    இதனால் ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் பதட்டமான நிலை நிலவியது. ஆஸ்பத்திரிக்குள் வெளிநபர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. விடுதலை சிறுத்தை கட்சியினர், புரட்சி பாரதம் கட்சியினர் ஏராளமானோர் ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். ஆஸ்பத்திரி வளாகம் முழுவதையும் போலீசார் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருந்தனர்.

    இதற்கிடையே காலை 10.30 மணியளவில் பிரேத பரிசோதனை முடிந்தது. 2½ மணிநேரம் மாணவி சரளாவின் உடலை டாக்டர்கள் குழுவினர் பரிசோதனை செய்து உள்ளனர்.

    பிரேத பரிசோதனை முடிந்ததும் மாணவி சரளாவின் உடலை பெற்றுக்கொள்ளும்படி ஆஸ்பத்திரியில் இருந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் போலீசார் தெரிவித்தனர். ஆனால் அவர்கள் மாணவியின் சாவில் உள்ள மர்மம் மற்றும் இதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைககள் குறித்து கேட்டு வாக்குவாதம் செய்தனர். மேலும் மாணவி சரளாவின் உடலை பெற்றுக் கொள்ள மறுத்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் மதியம் 12.30 மணி வரை போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத்தொடர்ந்து மாணவி சரளாவின் உடலை பெற்றுக்கொள்ள சம்மதித்தனர். பின்னர் மாணவியின் உடல் அவரது அண்ணன் சரவணன் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மதியம் 12.40 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் சொந்த ஊரான தெக்களூருக்கு ஆம்புலன்சு வேனில் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாணவியின் உடல் நல்லடக்கம் நடைபெற இருக்கிறது. இதையொட்டி தெக்களூரில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    இதேபோல் மாணவி சரளா படித்த பள்ளியிலும் இன்று 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். இன்றும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. விடுதியில் தங்கி படித்த 80 மாணவிகள் அவர்களது பெற்றோரை வரவழைத்து வீட்டிற்கு அனுப்பப்பட்டு உள்ளனர்.

    பள்ளி திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி கூறும்போது, நிதி உதவி பெறும் பள்ளி நிர்வாகத்தினர் பள்ளி திறப்பு குறித்து முடிவெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது, இன்று பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. மேலும் வழக்கின் தன்மையை பொறுத்து பள்ளி திறப்பு குறித்து முடிவு செய்யப்படும் என்றனர். மாணவியின் கிராமமான தெக்களூரிலும் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்து வருகிறது. அங்கும் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். வெளி நபர்கள் கிராமத்துக்குள் வருவதை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

    • திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மாணவி வழக்கில் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த சரளா பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.

    நீண்ட நேரம் ஆனதால் விடுதி அறைக்கு சென்று பார்த்த தோழிகள், தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாணவி வழக்கில் மாவட்ட சிபிசிஐடி காவல் ஆய்வாளர் திரிபுர சுந்தரி விசாரணை அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

    மாணவி மரண வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் டிஐஜி சத்யபிரியா கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • போலீசார் மாணவி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று டிஐஜி சத்யபிரியா கூறினார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (வயது17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து விடுதி பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் திருவள்ளூர் பள்ளி மாணவி தற்கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மாணவி மரண வழக்கை சந்தேக மரணமாக பதிவு செய்து விசாரணை நடத்தப்படும் என்றும் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் டிஐஜி சத்யபிரியா கூறினார்.

    • பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர்.
    • மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    மாணவி சரளாவின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும், மாணவி மரணம் குறித்து பள்ளி நிர்வாகம் முறையான தகவல் தரவில்லை என்று கூறி இன்று காலை தக்களூர் கிராமத்தில் பொதுமக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்கள் பொதட்டூர்பேட்டை- திருத்தணி சாலையில் அமர்ந்து மறியல் செய்தனர். அப்போது அவ்வழியே வந்த 4 பஸ்களை சிறைப்பிடித்தனர்.

    இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது. கடும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் நீண்ட வரிசையில் ஸ்தம்பித்து நின்றன.

    போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள். மாணவி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்படும் என்று போலீசார் தெரிவித்து உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார்.
    • மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்த மாணவி ஸ்ரீமதி கடந்த 2 வாரத்துக்கு முன்பு மர்மமான முறையில் இறந்தார்.

    இதைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. பின்னர் கோர்ட்டு உத்தரவுபடி நேற்று முன்தினம் மாணவி ஸ்ரீமதியின் உடல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

    இந்த சோகம் மக்கள் மனதில் இருந்து நீங்குவதற்குள் திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பிளஸ்-2 மாணவி விடுதியில் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு அருகே உள்ள கீழ்சேரியில் அரசு நிதி உதவி பெறும் "சேக்ரட் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப்பள்ளி" உள்ளது. இங்கு திருத்தணியை அடுத்த தக்களூர் கிராமத்தைச் சேர்ந்த பூசனம் என்பவரது மகள் சரளா (வயது17) பிளஸ்-2 படித்து வந்தார். அவர் பள்ளியின் பின்புறம் உள்ள விடுதியில் தங்கி பள்ளிக்கு சென்று வந்தார்.

    இன்று காலை வழக்கம்போல் மாணவி சரளா சீருடை அணிந்து பள்ளிக்கு புறப்பட்டார். பின்னர் அவர் தோழிகளுடன் உணவு சாப்பிடுவதற்காக விடுதியில் உள்ள அறைக்கு சென்றார். அப்போது மாணவி திடீரென விடுதி அறைக்கு செல்வதாக மற்ற தோழிகளுடன் கூறி விட்டு திரும்பிச் சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மாணவி சரளா திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த தோழிகள் விடுதி அறைக்கு சென்று பார்த்தபோது தூக்கில் தொங்கிய நிலையில் சரளா பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து விடுதி பொறுப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சந்திரதாசன், சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ மற்றும் போலீ சார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

    அவர்கள் மாணவி சரளாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவி சரளாவின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. இதுபற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாணவி தற்கொலை குறித்து அறிந்ததும் அவரது பெற்றோர் பூசனம், முருகம்மாள் மறறும் உறவினர்கள் ஏராளமானோர் பள்ளி விடுதிக்கு வந்தனர். அவர்கள் மாணவியின் தற்கொலை முடிவுக்கான காரணம் குறித்து பள்ளி நிர்வாகிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    அசம்பாவிதத்தை தடுக்க பள்ளி விடுதி முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் வெளியில் இருந்து வந்த யாரையும் விடுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

    இதேபோல் விடுதியில் இருந்த மாணவிகளையும் வெளியே செல்லவிடாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான நிலை ஏற்பட்டு உள்ளது.

    தற்கொலை செய்த மாணவி சரளா, விவசாயி பூசனம்-முருகம்மாள் தம்பதியின் ஒரே மகள் ஆவார். மகளின் உடலை பார்த்த அவர்கள் அலறி துடித்தது அனைவரையும் கண் கலங்க வைத்தது.

    மகளின் சாவில் உள்ள மர்மத்தை வெளியில் கொண்டு வர வேண்டும். அவளை தற்கொலைக்கு தூண்டியவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதற்கிடையே மாணவி தற்கொலை குறித்து காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகேர்லா செபாஸ் கல்யாண், திருவள்ளூர் வட்டாட்சியர் செந்தில்குமார், சப்-கலெக்டர் மகாபாரதி, குழந்தைகள் நல அலுவலர் மற்றும் அதிகாரிகள் மாணவி தற்கொலை செய்த இடத்தை ஆய்வு செய்தனர். அவர்கள் விடுதி காப்பாளர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.

    இதே போல் கல்வித்துறை அதிகாரிகளும் பள்ளியில் தனியாக விசாரணை நடத்தி வருகிறார்கள். சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி செல்வக்குமாரும் விசாரணை நடத்தி வருகிறார்.

    மாணவி சரளாவின் சொந்த ஊரான தக்களூர் கிராமத்திலும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருக்கிறார்கள். மாணவி தற்கொலை செய்ததையடுத்து பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.

    மாணவி தற்கொலை தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான்வர்கீஸ் கூறும்போது, "மாணவி சரளா தற்கொலை தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

    இதற்கிடையே பள்ளி விடுதியில் தங்கி உள்ள மற்ற மாணவிகளின் பெற்றோர் மற்றும் அவர்களது உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டு வந்தனர். அவர்கள் தங்களது மகள்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள வேண்டும் என்று கூறி விடுதிக்குள் செல்ல முயன்றனர்.

    ஆனால் அவர்களை விடுதிக்குள் செல்ல போலீசார் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், மாணவிகளின் பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அசம்பாவிதத்தை தடுக்க கூடுதல் போலீசார் அங்கு வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • 4 பேரும் ஆம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றனர்.
    • காமராஜ், பூமிகா ஜோதிகா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த காரப்பட்டு பகுதியை சேர்ந்தவர் காமராஜ். தேங்காய் மட்டை உரிக்கும் தொழிலாளி. இவரது மனைவி மாலதி. தம்பதிக்கு பூமிகா, ஜோதிகா, காமாட்சி (11) என 3 மகள்கள் இருந்தனர். காமாட்சி அங்குள்ள அரசு பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கடந்த 17-ம் தேதி மாலதியின் தாய் வீட்டில் திருவிழா நடந்தது. காமராஜ் அவரது மனைவி மாலதி மற்றும் 3 பெண் குழந்தைகள் திருவிழாவில் கலந்து கொண்டு மாலதியின் தாய் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிட்டனர். நேற்று முன்தினம் தங்களது வீட்டிற்கு வந்தனர். அப்போது முதல் காமராஜ் அவரது 3 மகள்களுக்கும் தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டது.

    இதையடுத்து 4 பேரும் ஆம்பூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீட்டிற்கு சென்றனர். தொடர்ந்து வயிற்றுப்போக்கு ஏற்பட்டதால் நேற்று இரவு காமராஜ் உள்ளிட்ட 4 பேரும் மீண்டும் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை காமாட்சி பரிதாபமாக இறந்தார். மேலும் காமராஜ், பூமிகா ஜோதிகா ஆகியோர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதுகுறித்து உமராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவிழாவில் உணவு சாப்பிட்ட பள்ளி மாணவி வயிற்றுப்போக்கால் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×