செய்திகள்
கோப்புபடம்

ஊத்துக்குளி, செங்கப்பள்ளி பகுதியில் நாளை மறுநாள் மின்தடை

Published On 2021-11-14 07:13 GMT   |   Update On 2021-11-14 07:13 GMT
ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பட்டிணம், பி.வி.ஆர்.பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம்  ஊத்துக்குளி, செங்கப்பள்ளி ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் நாளை மறுநாள் 16-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்சாரம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். மின்விநியோகம் தடைபடும் பகுதிகள் விவரம் வருமாறு:-

ஊத்துக்குளி துணை மின் நிலையம்:

ஊத்துக்குளி டவுன், ஊத்துக்குளி ஆர்.எஸ்., வி.ஜி.புதூர், ரெட்டிபாளையம், தாலிகட்டிபாளையம், தளவாய்பட்டிணம், பி.வி.ஆர்.பாளையம், சிறுக்களஞ்சி, வரப்பாளையம், பாப்பம்பாளையம், வெங்கலப்பாளையம், அணைப்பாளையம், வாய்ப்பாடி, மொரட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம், கொடியாம்பாளையம், சேடர்பாளையம், எஸ்.பி.என்.பாளையம், வெள்ளியம்பாளையம், கத்தாங்கன்னி, கோவிந்தம்பாளையம், ஆர்.கே.பாளையம், நடுத்தோட்டம், அருகம்பாளையம்.

செங்கப்பள்ளி துணை மின் நிலையம்:

செங்கப்பள்ளி, விருமாண்டம்பாளையம், காடபாளையம், பள்ளபாளையம், பழனிக்கவுண்டன்பாளையம், நீலாக் கவுண்டன்பாளையம், அம்மாபாளையம், காளிபாளையம் புதூர், வட்டாலப்பதி, செரங்காடு, அந்தியூர்பிரிவு, தேசிய நெடுஞ்சாலை ஆகிய பகுதிகள் ஆகும். 
Tags:    

Similar News