செய்திகள்
மு.க.ஸ்டாலின்

குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள்-ஒளிச்சுடர்கள்:மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Published On 2021-11-14 06:32 GMT   |   Update On 2021-11-14 06:32 GMT
குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை:

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு பிறந்த நாளான இன்று ஆண்டுதோறும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. குழந்தைகள் தினத்தையொட்டி, தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் குழந்தைகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-  

குழந்தைகள் மீது அளவற்ற அன்பு கொண்டிருந்த இந்திய ஒன்றியத்தின் முதல் பிரதமர் பண்டித் அவர்களின் பிறந்தநாளைக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடி மகிழ்கிறோம். குழந்தைகள் இந்நாட்டின் செல்வங்கள் - ஒளிச்சுடர்கள்!

ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு வகையில் திறமையானவர்கள், அழகானவர்கள்!

குழந்தைகளின் தனித் திறமைகளைக் கண்டறிந்து, அவர்களை வளர்த்தெடுப்போம்.  

குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்கி, மழலைப்பருவத்தில் உலகை அச்சமின்றி அணுகிக் கற்க துணை நிற்போம்!

குழந்தைகளைப் பாதுகாப்பது ஒட்டுமொத்தச் சமூகத்தின் கூட்டுச் செயல்பாடாகும். அவர்களுக்கு எதிரான பாலியல் - உளவியல் துன்புறுத்தல்களை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும்.
இவ்வாறு பதிவிட்டிருந்தார்.
Tags:    

Similar News