செய்திகள்
திருட்டு

உவரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு

Published On 2021-11-13 10:54 GMT   |   Update On 2021-11-13 10:54 GMT
உவரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

உவரி அருகே உள்ள மேற்கு தோப்புவிளை கிராமத்தை சேர்ந்தவர் பிரைடுவர்க்கீஸ் (வயது 25). இவர் விலைஉயர்ந்த ‘ரேஸ்’ மோட்டார் சைக்கிள் வைத்திருந்தார். இதன் மதிப்பு ரூ 1 லட்சத்து 25 ஆயிரம் ஆகும்.

சம்பவத்தன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, மறுநாள் காலை பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரைடு வர்க்கீஸ் உவரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிளை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News