செய்திகள்
காங்கயத்தில் இருந்து சென்னைக்கு தண்ணீர் உறிஞ்சும் எந்திரம் அனுப்பி வைப்பு
காங்கயம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எந்திரத்தை அனுப்பிவைத்தனர்.
திருப்பூர்:
தொடர் கன மழையால் சென்னை, தண்ணீரில் மிதக்கிறது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து மக்கள் தவிக்கின்றனர். மீட்பு பணிகள் மேற்கொள்வதற்காக திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் இருந்து தண்ணீர் உறிஞ்சி வெளியேற்றும் எந்திரம் பொருத்தப்பட்ட டிராக்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
காங்கயம் நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் 3 தண்ணீரை உறிஞ்சி வெளியேற்றும் டிராக்டர்கள் ஏற்றப்பட்ட லாரியை கொடி அசைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் உட்பட அதிகாரிகள் உடனிருந்தனர்.