செய்திகள்
கொரோனா வைரஸ்

கோவை மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு 100-க்கு கீழ் குறைந்த கொரோனா தொற்று

Published On 2021-11-08 10:20 GMT   |   Update On 2021-11-08 10:20 GMT
கோவை மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு கொரோனா தொற்று நேற்று 100-க்கு கீழ் வந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கோவை:

கோவை மாவட்டத்தில் 2-வது அலையாக கடந்த மே மாதம் முதல் கொரோனா தொற்று வேகமாக பரவியது. படிப்படியாக தொற்று எண்ணிக்கை உயர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் ஒரு நாளைக்கு 2,500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த நடவடிக்கை காரணமாக மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா தொற்று குறைய தொடங்கியது.

தற்போது கோவை மாவட்டத்தில் ஒரு ஆண்டுக்கு பிறகு கொரோனா தொற்று நேற்று 100-க்கு கீழ் வந்தது. மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் நேற்று ஒரே நாளில் 99 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 47 ஆயிரத்து 431 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று காரணமாக அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகள், சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்ற 126 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பினர். இதனால் மாவட்டத்தில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 43 ஆயிரத்து 824 ஆக உயர்ந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 59,55 வயதுடைய 2 ஆண்கள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற 60 வயது முதியவர் உள்பட 3 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இதனால் மாவட்டத்தில் பலி எண்ணிக்கை 2,428 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் கொரோனா தொற்று காரணமாக 1,179 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News