செய்திகள்
பேரளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி
பேரளத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்:
பேரளம் அருகே உள்ள பண்டாரவாடை பகுதியை சேர்ந்தவர் ராமையன் (வயது70) கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் அதிகாலை பேரளம்- காரைக்கால் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ராமையன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பேரளம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராமையன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர்.