செய்திகள்
துடியலூர் அருகே கட்டிட தொழிலாளியிடம் பணம் பறிப்பு
துடியலூர் அருகே கட்டிட தொழிலாளியிடம் பணம் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
துடியலூர்:
துடியலூர் அருகில் உள்ள உருமாண்டாம் பாளையத்தை சேர்ந்தவர் மாரிமுத்து (வயது 32) கட்டிட தொழிலாளி. சம்பவத்தன்று இவர் அங்குள்ள பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக நின்றிருந்தார்.
அப்போது அங்கு வந்த 18 வயது சிறுவன் திடீரென மாரிமுத்துவின் பாக்கெட்டில் இருந்த ரூ.500 பணத்தை பறித்துக்கொண்டு ஓடினான். இதனை அக்கம், பக்கத்தினர் பார்த்து ஓடிவந்து, சிறுவனை மடக்கிப் பிடித்து துடியலூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை கைது செய்தனர்.