செய்திகள்
மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் விழுந்து வாலிபர் பலி
மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரை பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவரின் பிணம் கிடந்தது.
மன்னார்குடி:
மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரை பகுதியில் நேற்று காலை வாலிபர் ஒருவரின் பிணம் கிடந்தது. இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் மன்னார்குடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த மன்னார்குடி போலீசார் இறந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இறந்தவர் மன்னார்குடி தெப்பக்குளம் பாரதிதாசன் தெருவைச்சேர்ந்த சத்யன் (வயது30) என்பதும், கடந்த சில தினங்களாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட அவர் ஹரித்ராநதி தெப்பக்குளத்தில் விழுந்து இறந்திருக்கலாம் என்பதும் தெரியவந்தது.