செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-10-27 08:32 GMT   |   Update On 2021-10-27 10:05 GMT
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளதால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
சென்னை:

வடகிழக்கு பருவமழை கடந்த 25-ந் தேதி தொடங்கியது. 3 நாட்களுக்கு முன்னதாகவே பருவமழை தொடங்கி பரவலாக மழை பெய்து வருகிறது.

இந்த நிலையில் தெற்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.



இந்த புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 3 தினங்களுக்கு மேற்கு நோக்கி நகர்ந்து தமிழக கடற்கரையை நோக்கி வரும். இதனால் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். இதேபோல உள் மாவட்டங்களிலும் மழை பெய்யும். அப்போது 40 முதல் 50 கி.மீ. வேகத்திலும், 60 கி.மீ. வரையிலும் காற்று வீசக்கூடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News