செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது

Published On 2021-10-25 09:09 GMT   |   Update On 2021-10-25 09:09 GMT
ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஆண்டிபட்டி:

ஆண்டிபட்டி அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே குன்னூரை சேர்ந்தவர் வெள்ளத்துரை (வயது60). இவர் விவசாயம் செய்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த சிறுமி இவரது மாட்டுக்கொட்டகை அருகே விளையாடிக் கொண்டிருக்கும்போது தனியாக அழைத்துச் சென்ற வெள்ளைதுரை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி தனது பெற்றோரிடம் நடந்ததை கூறினார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையில் சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. எனவே வெள்ளத்துரையை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.



Tags:    

Similar News