செய்திகள்
கோப்புபடம்.

பல்லடம் பஸ் நிலையத்தில் பிக்பாக்கெட் திருடர்கள் 2 பேர் கைது

Published On 2021-10-25 07:19 GMT   |   Update On 2021-10-25 07:19 GMT
பொதுமக்கள் 2 பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
பல்லடம்:

பல்லடம் பஸ் நிலையத்தில் கோவையில் இருந்து பல்லடம் வழியாக திருச்சி செல்லும் அரசு பேருந்து வந்து நின்றது. அப்போது அந்த பஸ்சில் சிலர் கூட்டமாக ஏறினர். அதில் இருந்த ஒருவர் திடீரென ஐயோ திருடன் என் பர்சை எடுத்து விட்டான் என கூச்சல் போட்டுள்ளார். அவரது கூச்சல் கேட்டு 2 வாலிபர்கள் பஸ்சில் இருந்து இறங்க முயன்றனர். 

அதற்குள் பொதுமக்கள் அவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்து பல்லடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடம் வந்த போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்ததில் அவர்கள் நாகப்பட்டினத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகன் கமல் (33), சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரை சேர்ந்த அடைக்கன் மகன் நாகராஜ் (28) என்பது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடத்தனர். 
Tags:    

Similar News