செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு நடந்த ஆம்புலன்ஸ் டிரைவர் கொலையில் மேலும் ஒருவர் கைது

Published On 2021-10-19 08:35 GMT   |   Update On 2021-10-19 08:35 GMT
ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விக்னேசை சரமாரியாக குத்தினார்.
திருப்பூர்:

திருப்பூர் முத்தனம்பாளையம் பாலாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் 
( வயது 24 ). இவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரி முன்பு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருந்தார். சம்பவத்தன்று அரசு ஆஸ்பத்திரி முன்பு இவருக்கும் மற்றொரு டிரைவர் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ( 23 )  என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த தகராறில் அசோக்குமாரின் ஆம்புலன்சில் உள்ள ப்ரீஷர் பாக்சை விக்னேஷ் கல்லால் தாக்கி சேதப்படுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அசோக்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து விக்னேசை சரமாரியாக குத்தினார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடி துடித்து இறந்தார். 

இதுதொடர்பாக திருப்பூர் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக் குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது இந்த கொலை சம்பவத்தின் போது திருப்பூர் சந்திராபுரம் எஸ்.ஆர்.பி தோட்டத்தை சேர்ந்த முருகன் ( 47 ) என்பவரும் அசோக்குமாரும் சேர்ந்துதான் விக்னேசை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து தலைமறைவாக இருந்த முருகனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 
Tags:    

Similar News