செய்திகள்
பல்லடத்தில் நாளை மின் நுகர்வோர் குறைகேட்பு கூட்டம்
மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்தலாம்.
பல்லடம்:
பல்லடம் கோட்ட மின் நுகர்வோர் குறைகேட்பு முகாம் பல்லடம் - உடுமலை ரோட்டிலுள்ள மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் நாளை 20 - ந் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு பல்லடம் மின் பகிர்மான வட்டத்தின் மேற்பார்வை பொறியாளர் சுப்பிரமணியம் தலைமையில் நடைபெறுகிறது.
இதில் மின் நுகர்வோர்கள் கலந்து கொண்டு தங்களது மின்சார விநியோகம் குறித்து குறைகள், புகார்கள் ஏதேனும் இருந்தால் தெரியப்படுத்துமாறு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் பல்லடம் செயற்பொறியாளர் கோபால் தெரிவித்துள்ளார்.