செய்திகள்
கோப்புபடம்.

வெள்ளகோவிலில் பெண் மாயம்

Published On 2021-10-18 09:05 GMT   |   Update On 2021-10-18 09:05 GMT
திருமூர்த்தி, சங்கீதாவிடம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுமாறு கூறியுள்ளார்.
வெள்ளகோவில்:

வெள்ளகோவில் அருகே உள்ள வெள்ளாத்தான்கரை புதுரை சேர்ந்தவர் திருமூர்த்தி (வயது 30), விவசாயி. இவருக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இவரது மனைவி சங்கீதா. ஒரு மகள் உள்ளார். இந்தநிலையில் திருமூர்த்தி, சங்கீதாவிடம் தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுமாறு  கூறியுள்ளார். 

இதனால் சங்கீதா கணவருடன் சண்டை போட்டுவிட்டு சென்றவர் அதன்பிறகு வீடு திரும்பவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 

இதுகுறித்து திருமூர்த்தி வெள்ளகோவில் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.  
Tags:    

Similar News