செய்திகள்
கோப்புபடம்

தபால் துறையில் காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு

Published On 2021-10-16 08:03 GMT   |   Update On 2021-10-16 08:03 GMT
எழுத்துதேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய இரு வகையில் தேர்வுகள் நடத்தப்படும்.
திருப்பூர்:

தமிழ்நாடு தபால்துறை வட்டத்தில் காலியாக உள்ள 500 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

போஸ்ட்மேன் பிரிவில் சென்னை மண்டலத்தில் - 234, மத்திய மண்டலத்தில் - 58, தெற்கு - 117, மேற்கு மண்டலத்தில் - 79, மெயில் கார்டு பிரிவில் - 13 என 501 இடங்கள் காலியாக உள்ளன. இதற்கு 10-ம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். தமிழ் ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். 

ஜனவரி 2021 அடிப்படையில் பொதுப்பிரிவினர் - 50 வயதிற்குள், ஓ.பி.சி., - 56, எஸ்.சி., எஸ்.டி., பிரிவில் - 55 வயதிற்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர். எழுத்துதேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய இரு வகையில் தேர்வுகள் நடத்தப்படும். 

சென்னை, கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் தேர்வு மையம் அமைக்கப்படும். விண்ணப்பிக்க விரும்புவோர் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கோட்ட அலுவலகங்களுக்கு வரும் 20-ந்தேதிக்குள் அனுப்ப வேண்டும். 

மேலும் விபரங்களுக்கு, https://tamilnadupost.nic.in இணையதளத்தை பார்க்கலாம்  திருப்பூர் மாவட்ட தபால்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 
Tags:    

Similar News