செய்திகள்
மழை

கனமழைக்கு வாய்ப்புள்ள 5 மாவட்டங்கள்

Published On 2021-10-15 07:49 GMT   |   Update On 2021-10-15 07:49 GMT
சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும். டெல்டா மாவட்டங்கள், கன்னியாகுமரி, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழை பெய்யும்.

நாளை நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும்.

17-ந் தேதி மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, நீலகிரி, கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்யும்.



சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

மத்திய கிழக்கு மற்றும் அதனையொட்டியுள்ள தென்கிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று தென்கிழக்கு அரபிக்கடலை ஒட்டிய கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags:    

Similar News