செய்திகள்
ஏ.டி.எம். மையங்களுக்கு வரும் முதியவர்களிடம் நூதன பண மோசடி - வடமாநில வாலிபர் கைது
முதியவர்களுக்கு பணம் எடுத்து உதவுவது போல் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு கார்டுகளை மாற்றி கொடுத்து, பணத்தை திருடுவதை பஸ்வான் வழக்கமாக வைத்திருந்தார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டம் தாராபுரம், மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.டி.எம்., மையங்களுக்கு பணம் எடுக்க செல்லும் முதியவர், கிராம மக்களை நோட்டமிட்டு சிலர், பணம் எடுத்து தருவது போல் ஏ.டி.எம்., கார்டை மாற்றியும், ஏமாற்றியும் பணத்தை திருடி செல்லும் சம்பவம் அடிக்கடி நடந்து வந்தது. இதுபோன்ற தொடர் திருட்டு தொடர்பாக, தாராபுரம் போலீசில் பலர் புகார் செய்தனர்.
இதையடுத்து ஏ.டி.எம்., மையங்களில் கிடைத்த ‘சி.சி.டி.வி.’ கேமரா பதிவுகளை கொண்டு போலீசார் விசாரித்து வந்தனர். இதில் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோட்டே லால் பஸ்வான் (வயது34) என்பவர் முதியவர்களிடம் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது.
முதியவர்களுக்கு பணம் எடுத்து உதவுவது போல் ரகசிய எண்ணை கேட்டு தெரிந்து கொண்டு கார்டுகளை மாற்றி கொடுத்து, பணத்தை திருடுவதை வாடிக்கையாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.