செய்திகள்
சத்துணவு பொருட்கள் வழங்கும் ஊழியர்

சத்துணவு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு- அரசாணை வெளியீடு

Published On 2021-10-08 14:44 GMT   |   Update On 2021-10-08 14:44 GMT
ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டிருப்பதால் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள்.
சென்னை: 

சத்துணவு மையங்களில் பணிபுரியும் சத்துணவுச் சமையலர்கள் மற்றும் சமையல் உதவியாளர்கள் ஆகியோரின் ஓய்வுபெறும் வயது 58-ல் இருந்து 60 ஆக உயர்த்தப்படும் என தமிழக சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 

அதன்படி, சத்துணவு மையங்களில் பணிபுரியும் சமையலர், உதவியாளர்களின் ஓய்வுபெறும் வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்பட்டு இன்று அரசாணை வெளியிடப்பட்டுளள்து. 

இதன்மூலம் தற்போது பணியிலிருக்கும் 29 ஆயிரத்து 137 சமையலர்களும், 24 ஆயிரத்து 576 சமையல் உதவியாளர்களும் பயன்பெறுவார்கள்.
Tags:    

Similar News