செய்திகள்
விபத்து பலி

திருவள்ளூர் அருகே கார் மோதி தொழிலாளி பலி

Published On 2021-10-08 10:18 GMT   |   Update On 2021-10-08 10:18 GMT
திருவள்ளூர் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர்:

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள கீழ்மணம்பேடு கிராமம் எம்.ஜி.ஆர். தெருவை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 61). கூலித்தொழிலாளி.இந்த நிலையில் கடந்த 6-ந் தேதியன்று ஏழுமலை வேலையின் காரணமாக சைக்கிளில் வெள்ளவேடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அங்கு இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த ஏழுமலை நேற்று முன்தினம் சிகிச்சை பலனில்லாமல் பரிதாபமாக இறந்து போனார். இதுகுறித்து வெள்ளவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய கார் டிரைவரான ஆந்திர மாநிலம் மண்டலி, பட்டி புதூர் கிராமத்தை சேர்ந்த நவீன் (30) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News