செய்திகள்
கோப்புப்படம்

ஆத்தூர் அருகே இறைச்சி வியாபாரி தூக்குப்போட்டு மரணம்

Published On 2021-10-07 10:26 GMT   |   Update On 2021-10-07 10:26 GMT
ஆத்தூர் அருகே இறைச்சி வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆறுமுகநேரி:

ஆத்தூர் அருகே உள்ள முக்காணி பரதர் தெருவை சேர்ந்தவர் ஜேசு. இவரது மகன் பிரசாத் என்ற தாமஸ் எலேன்ஸ் (வயது 34). இறைச்சி கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ஜேசு தனது மகன் பிரசாத்திற்காக புதிய வீடு ஒன்றை கட்டி வந்துள்ளார். அதற்கான கட்டுமான பொருட்களை வாங்க பிரசாத்திடம் பணம் கொடுத்து அனுப்பியுள்ளார். ஆனால் பிரசாத் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது குடித்துவிட்டு பணத்தை செலவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனை அறிந்த ஜேசு, பிரசாத்தை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பிரசாத் வீட்டில் தூக்கில் தொங்கியபடி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். அவரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து ஆத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News