செய்திகள்
வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் 5 நாட்கள் மிதமான மழைக்கு வாய்ப்பு- வானிலை ஆய்வு மையம்

Published On 2021-10-07 07:33 GMT   |   Update On 2021-10-07 09:36 GMT
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:

வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். இன்று வடகடலோர மாவட்டம், டெல்டா மாவட்டம், கன்னியாகுமரி, புதுக்கோட்டை மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும், நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் உள் மாவட்டங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.



நாளை வட மாவட்ட மற்றும் டெல்டா மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 9-ந் தேதி வட மாவட்டங்களில் லேசான மழை பெய்யும். 10, 11 ஆகிய தேதிகளில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.


Tags:    

Similar News