செய்திகள்
கோப்புபடம்.

பல்லடம் அருகே 4 மாடுகள் திருட்டு

Published On 2021-10-07 07:11 GMT   |   Update On 2021-10-07 07:11 GMT
பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அதன் கன்று ஆகிய 2 மாடுகளும் திருடப்பட்டிருந்தது.
பல்லடம்:

பல்லடம் அருகே உள்ள காட்டூர் ஊராட்சி சோழியப்ப கவுண்டன்புதூரை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது42) விவசாயி. கால்நடைகளும் வளர்த்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் 2 கறவை மாடுகளை மேய்ச்சல் முடிந்து தோட்டத்தில் உள்ள மாட்டு கொட்டகையில் கட்டி வைத்திருந்தார். 

இந்தநிலையில் நேற்று காலை சென்று பார்த்தபோது கட்டப்பட்டிருந்த 2  மாடுகளையும் காணவில்லை. அக்கம்பக்கம் தேடியும் கிடைக்காததால் மாடுகள் திருடு போனது தெரியவந்தது. இதையடுத்து
காமநாயக்கன்பாளையம் போலீசில் மோகன் புகார் செய்தார்.

இதேபோல அவரது பக்கத்து தோட்டத்தை சேர்ந்த ரங்கநாதன் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, அதன் கன்று ஆகிய 2 மாடுகளும் திருடப்பட்டிருந்தது. 

ஒரே பகுதியில் 4 மாடுகளை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News