செய்திகள்
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள்.

பல்லடத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-07 07:02 GMT   |   Update On 2021-10-07 07:02 GMT
உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிற யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பல்லடம்:

உத்தரபிரதேசத்தில் விவசாயிகள் படுகொலையை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பல்லடம் கொசவம்பாளையம் ரோட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினர் கே.வி . சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். 

ஆர்ப்பாட்டத்தின் நோக்கங்கள் குறித்தும், உத்தரபிரதேச மாநிலத்தில் விவசாயிகள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிற யோகி ஆதித்யநாத் அரசை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பிரவீண் குமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய செயலாளர் பழனிசாமி ஆகியோர் பேசினர். 

ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட குழு உறுப்பினர் பஞ்சலிங்கம், ஒன்றிய செயலாளர் பரமசிவம் உட்பட பலர் கலந்து கொண்டனர். 
Tags:    

Similar News