செய்திகள்
கோப்புபடம்

திருக்குறள் முற்றோதல் திட்டத்தில் பங்கேற்க மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

Published On 2021-10-07 06:08 GMT   |   Update On 2021-10-07 06:08 GMT
1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது.
திருப்பூர்:

திருக்குறள் முற்றோதல் திட்டத்தில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்:

மாணவ, மாணவிகள் திருக்குறளில் உள்ள கருத்துக்களை அறிந்து நல்லொழுக்கம் மிக்கவர்களாக விளங்க செய்யும் வகையில் திருக்குறள் முற்றோதல் பாராட்டு பரிசு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

தமிழ் வளர்ச்சித்துறையின் சார்பில் இத்திட்டத்தின் கீழ் 1,330 குறட்பாக்களையும் ஒப்புவிக்கும் மாணவ, மாணவிகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசு வழங்கப்படுகிறது. 

திருக்குறளை ஒப்புவிக்கும் திறனுள்ள மாணவ, மாணவிகள் திருப்பூர்  கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் நேரிலோ, தபால் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
Tags:    

Similar News