செய்திகள்
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் வினியோகம் நிறுத்தம்
வருகிற 7-ந்தேதி முதல் தடையின்றி மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும் என ஆணையாளர் கிராந்தி குமார் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருப்பூர் மாநகராட்சி பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யும் 3-வது குடிநீர் திட்டம் பவானியில் உள்ள தலைமை நீரேற்று நிலையத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள 8 மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
எனவே திருப்பூர் மாநகராட்சி பகுதியில் நாளை 6 - ந்தேதி (புதன்கிழமை) குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட உள்ளது. வருகிற 7-ந்தேதி முதல் தடையின்றி மாநகராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.