செய்திகள்
கோப்புபடம்.

மோடிக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்கள் - சி.பி.ராதாகிருஷ்ணன் பேச்சு

Published On 2021-10-04 11:02 GMT   |   Update On 2021-10-04 11:02 GMT
பிரதமர் மோடியின் 20 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி வலையன்காடு சுப்பராய கவுண்டர் மண்டபத்தில் நடைபெற்றது.
திருப்பூர்:

பா.ஜ.க.., திருப்பூர் வடக்கு மாவட்ட ஓ.பி.சி., அணி சார்பில் பிரதமர் மோடியின் 20 ஆண்டு சாதனை விளக்க கண்காட்சி வலையன்காடு சுப்பராய கவுண்டர் மண்டபத்தில் நடைபெற்றது. 

இதில் தேசிய செயற்குழு உறுப்பினர் சி.பி.ராதாகிருஷ்ணன் கண்காட்சியை  தொடங்கி வைத்து பேசினார். 

அவர் பேசுகையில், 

மோடிக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும், அவர்கள், அரசியலில் இருந்து காணாமல் போவர். தமிழகத்தில், தாமரை மலர்ந்தே தீரும். கட்சியினர் ஒவ்வொருவரும் மோடியைப் போல் உழைக்க வேண்டும் என்றார். மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார். தேசிய பொதுக்குழு உறுப்பினர் மணி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் சின்னசாமி, நாச்சிமுத்து, கோட்ட அமைப்பு செயலாளர் பாலக்குமார், மாவட்ட பொதுச்செயலாளர்கள் சீனிவாசன், தங்கராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.  
Tags:    

Similar News