செய்திகள்
காதலி வேறொருவரை திருமணம் செய்ததால் வாலிபர் தற்கொலை
கோவை அருகே காதலி வேறொருவரை திருமணம் செய்ததால் மனமுடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கோவை:
திருவண்ணாமலை மாவட்டம் வீரலூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தாரணி (வயது 20). கடந்த 1 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் சூலூர் தொன்னம்பாளையத்தில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தாரணிக்கு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் பல இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் அந்த இளம்பெண் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு வேறொரு வாலிபரை திருமணம் செய்தார். தனது காதலி வேறொரு வாலிபரை திருமணம் செய்ததால் தாரணி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட தாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவண்ணாமலை மாவட்டம் வீரலூரை சேர்ந்தவர் ஏழுமலை. இவரது மகன் தாரணி (வயது 20). கடந்த 1 வருடங்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இவர் சூலூர் தொன்னம்பாளையத்தில் உள்ள ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தாரணிக்கு ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் பல இடங்களுக்கு சென்று தங்களது காதலை வளர்த்து வந்தனர்.
இந்தநிலையில் அந்த இளம்பெண் கடந்த 1 மாதங்களுக்கு முன்பு வேறொரு வாலிபரை திருமணம் செய்தார். தனது காதலி வேறொரு வாலிபரை திருமணம் செய்ததால் தாரணி கடந்த சில நாட்களாக மிகுந்த மனவேதனை அடைந்து காணப்பட்டார்.
சம்பவத்தன்று அறையில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து சக தொழிலாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இது குறித்து சூலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட தாரணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
சூலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.