செய்திகள்
கொள்ளை

கோவையில் பேராசிரியர் வீடு உள்பட 2 இடங்களில் நகை-பணம் கொள்ளை

Published On 2021-09-30 09:49 GMT   |   Update On 2021-09-30 09:49 GMT
கோவையில் பேராசிரியர் வீடு உள்பட 2 இடங்களில் நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குனியமுத்தூர்:

கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி (வயது 57). இவர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். அப்போது பேராசிரியர் தட்சணாமூர்த்தி வீட்டின் முன்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே சென்றனர். பின்னர் அறையில் இருந்து பீரோவை திறந்து அதில் இருந்த மோதிரம், கம்மல் உள்பட 1¼ பவுன் தங்க நகைகள், வெள்ளி கொலுசு உள்பட ரூ.49 ஆயிரம் மதிப்பிலான நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடிது சென்றனர்.

மாலையில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பிய தட்சணா மூர்த்தி வீட்டில் கொள்ளை போயிருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இது குறித்து போத்தனூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பேராசிரியர் வீட்டில் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

மற்றொரு சம்பவம்...

வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர் குணசேகரன் (35). பெயிண்டர். சம்பவத்தன்று இவர் தனது வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றார். பின்னர் மாலையில் வீட்டிற்கு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து இருந்தது. அதிர்ச்சியடைந்த குணசேகரன் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.

வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள் அறையில் இருந்து பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.75 ஆயிரம் பணம் மற்றும் வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து குணசேகரன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெயிண்டர் வீட்டில் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News