செய்திகள்
கோப்பு படம்

குடியாத்தம் அருகே ரெயில் மோதி மூதாட்டி பலி

Published On 2021-09-28 08:50 GMT   |   Update On 2021-09-28 08:50 GMT
குடியாத்தம் அருகே ரெயில் மோதி மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

குடியாத்தத்தை அடுத்த கே.வி.குப்பம் சுண்ணாம்பு காலனி பகுதியை சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி கனகம்மாள் (வயது 70). இவர் நேற்று முன்தினம் காவனூர்- லத்தேரி ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கும்போது அந்தவழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முரளிமனோகரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கனகம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News