செய்திகள்
கோட்டாரில் இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலை
கோட்டாரில் தாயார் திட்டியதால் மனம் உடைந்த இளம்பெண் ஆசிட் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில்:
கோட்டார் சுமை தாங்கி அம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகள் அஜிதா (வயது 21).
இவர், கம்பளத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அஜிதா வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இது குறித்து அவரது தாயார் அஜிதாவிடம் விசாரித்தார். அப்போது அஜிதா, தோழி ஒருவருடன் வெளியில் சென்று இருந்ததால் தாமதமாகி விட்டதாக கூறினார்.
இதையடுத்து அஜிதாவை அவரது தாயார் கண்டித்தார். மனம் உடைந்து காணப்பட்ட அஜிதா, வீட்டில் யாருடனும் பேசவில்லை. இந்த நிலையில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் அஜிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அஜிதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோட்டார் சுமை தாங்கி அம்மன் கோவிலைச் சேர்ந்தவர் ராஜலிங்கம். இவரது மகள் அஜிதா (வயது 21).
இவர், கம்பளத்தில் உள்ள கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு சென்ற அஜிதா வீட்டிற்கு தாமதமாக வந்துள்ளார். இது குறித்து அவரது தாயார் அஜிதாவிடம் விசாரித்தார். அப்போது அஜிதா, தோழி ஒருவருடன் வெளியில் சென்று இருந்ததால் தாமதமாகி விட்டதாக கூறினார்.
இதையடுத்து அஜிதாவை அவரது தாயார் கண்டித்தார். மனம் உடைந்து காணப்பட்ட அஜிதா, வீட்டில் யாருடனும் பேசவில்லை. இந்த நிலையில் கழிவறைக்கு பயன்படுத்தப்படும் ஆசிட்டை குடித்து மயங்கி விழுந்தார்.
இதைப்பார்த்த அவரது பெற்றோர் அஜிதாவை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலை அஜிதா பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கோட்டார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.