செய்திகள்
திருப்பூரில் அரசு பஸ் மோதி முதியவர் சாவு
அவிநாசி ரோடு பிரேம் அப்பார்ட்மெண்ட் அருகே வரும்போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
திருப்பூர்:
திருப்பூர் அனுப்பர்பாளையம் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் வெங்கட்ரமணி( வயது 70). இவர் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தார்.
திருப்பூர் அவிநாசி ரோடு பிரேம் அப்பார்ட்மெண்ட் அருகே வரும்போது கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி வந்த அரசு பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கட்ரமணி தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.
இதுகுறித்த தகவல் கிடைத்ததும் அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.