செய்திகள்
திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் பலி
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் திருமணமான 15 நாளில் புதுமாப்பிள்ளை விபத்தில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சரவணன் (வயது 26).
இவருக்கும் வடக்கு இலந்தகுளத்தை சேர்ந்த கீதா என்பவருக்கும் கடந்த 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விருந்து நிகழ்ச்சிக்காக கீதாவின் பாட்டி வீடான கயத்தாறுக்கு நேற்று சென்றனர்.
இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்று வருவதாக சரவணன் மட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அகிலாண்டபுரத்திற்கு சென்றார். அவர் பன்னீர்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது அங்கு சாலையோரம் செங்கல் ஏற்றிச் சென்ற லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் லாரி நின்றது தெரியவில்லை.
அப்போது சரவணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் பால் ஆகியோர் விரைந்து சென்று பலியான சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள அகிலாண்டபுரத்தை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சரவணன் (வயது 26).
இவருக்கும் வடக்கு இலந்தகுளத்தை சேர்ந்த கீதா என்பவருக்கும் கடந்த 8-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து விருந்து நிகழ்ச்சிக்காக கீதாவின் பாட்டி வீடான கயத்தாறுக்கு நேற்று சென்றனர்.
இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்று வருவதாக சரவணன் மட்டும் தனது மோட்டார் சைக்கிளில் அகிலாண்டபுரத்திற்கு சென்றார். அவர் பன்னீர்குளம் விலக்கு பகுதியில் சென்ற போது அங்கு சாலையோரம் செங்கல் ஏற்றிச் சென்ற லாரி நிறுத்தப்பட்டிருந்தது. இரவு நேரம் என்பதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் லாரி நின்றது தெரியவில்லை.
அப்போது சரவணன் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் எதிர் பாராதவிதமாக லாரியின் பின் பகுதியில் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
சம்பவ இடத்திற்கு கயத்தாறு இன்ஸ்பெக்டர் முத்து, சப்-இன்ஸ்பெக்டர் பால் ஆகியோர் விரைந்து சென்று பலியான சரவணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.