செய்திகள்
மீட்கப்பட்ட நிலம்.

ரூ.10கோடி மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

Published On 2021-09-22 11:27 GMT   |   Update On 2021-09-22 11:27 GMT
இன்று காலை திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் சென்று நிலத்தை மீட்டனர்.
திருப்பூர்

திருப்பூர் அடுத்த நல்லூர் சென்னிமலை பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் இடத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்திருந்தார். இது தொடர்பான புகாரின் அடிப்படையில் திருப்பூர் தெற்கு தாசில்தார் நேரடியாக அந்த இடத்தை சென்று ஆய்வு செய்தபோது , அது அரசுக்கு சொந்தமான இடம் என்பதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. 

இதனையடுத்து இன்று காலை திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி சரவணமூர்த்தி தலைமையில் தாசில்தார் ராஜ்குமார், துணை தாசில்தார் அருள்குமார் மற்றும் அதிகாரிகள் அந்த இடத்தை மீட்டனர். அந்த இடத்தின் மதிப்பு ரூ.10 கோடி ஆகும். 
Tags:    

Similar News