செய்திகள்
ஆலோசனை கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேசியபோது எடுத்த படம். அருகில் நிர்வாகிகள் பலர் உள்ளனர்.

உள்ளாட்சி தேர்தல் பணி திருப்பூர் மாநகராட்சி தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும் - பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., பேச்சு

Published On 2021-09-22 10:28 GMT   |   Update On 2021-09-22 10:28 GMT
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற திருப்பூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநகர அவைத்தலைவர் பழனிச்சாமி தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார்.
 
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வாலாஜா ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்ற திருப்பூர் மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அங்கு எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை நடத்தப்பட்டது. 

கூட்டத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. பேசும்போது, வாலாஜா ஒன்றியத்தில் நடக்கும் ஊரக உள்ளாட்சி தேர்தலில் நாம் சிறப்பாக பணியாற்றி அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடுபவர்களுக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும். 

அங்கு நாம் பணி யாற்றுவது, திருப்பூர் மாநகராட்சி தேர்தலுக்கு முன்னோட்டமாக அமையும். அதனால் அனைவரும் ஒன்று சேர்ந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்றார். 
Tags:    

Similar News