செய்திகள்
திருப்பூர் மசாஜ் சென்டரில் வடமாநில அழகிகளை வைத்து விபச்சாரம் செய்த வாலிபர் கைது
ஒரு அறையில் 4 இளம்பெண்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் மீட்டனர்.
திருப்பூர்:
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள ஒரு லாட்ஜில் மசாஜ் சென்டர் செயல்படுவதாகவும், அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வதாகவும் திருப்பூர் தெற்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையிலான போலீசார் திடீரென மசாஜ் சென்டரில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது ஒரு அறையில் 4 இளம்பெண்கள் இருப்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் மீட்டனர். பின்னர் அவர்களிடம் விசாரித்தபோது ஆந்திரா மாநிலம் மற்றும் மதுரை, திருப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.
பனியன் நிறுவனத்தில் வேலை இருப்பதாக அழைத்து வந்து இது போன்ற விபச்சாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்திய சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியை சேர்ந்த மோகன் (27) என்பவரை போலீசார் கைது செய்தனர்.